தென்னாப்பிரிக்காவின் இரவு விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த 17 இளைஞர்கள்

தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள ஒரு தற்காலிக இரவு விடுதியில் மர்மமான முறையில் 20 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கிழக்கு லண்டனில் உள்ள சினரி பூங்காவில் உள்ள உள்ளூர் உணவகத்தில் 17 பேர் இறந்துகிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள வளாகத்தில் சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்பொழுது மேலும் 3 இளைஞர்கள் இறந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களில் எந்தவித வெளிக்காயங்களோ இல்லை என்றும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்,பிரேதபரிசோதனைக்கு பின்னர் தான் இவர்களின் இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment