சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள எல்லை பகுதியில் வேலி மீது ஏறி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த குடிமக்கள் மொத்தம் 100 பேர் அடங்கிய புலம்பெயர்ந்தோர் குழு ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் சான் டியாகோ செக்டார் பார்டர் ரோந்து அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் 100 பேர் கொண்ட இந்த புலம்பெயர்ந்தோர் குழுவில் 17 பேர் இந்திய குடிமக்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 2022 நிதியாண்டில் சான் டியாகோ அதிகாரிகளால் 1,45,600 புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment