3 காதலிகளுடன் 15 ஆண்டுகள் ‘லிவிங் டுகெதர்’…! பெற்ற பிள்ளைகள் முன் கோலாகல திருமணம்…!

15 ஆண்டுகள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து குழந்தைகளை பெற்றேடுத்த பின், குழந்தைகள் முன்னிலையில், 3 காதலிகளையும் கரம்பிடித்த நபர்.  

மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில்  நண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சமர்த். இவருக்கு வயது 42. இவர் கடந்த 15 வருடங்களாக 3 பெண்களை காதலித்து வந்த நிலையில், அவர்களுடன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவரது இந்த வாழ்க்கை முறை குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பியபோது, வறுமையின் காரணமாக நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறேன். எனது மூன்று காதலிகளின் மூலமாக ஆறு குழந்தைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பழங்குடி இன வழக்கப்படி திருமணம் செய்யாமல் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. திருமணம் செய்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் இதற்காகவே அவர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து தனது மூன்று காதலிகளை தனது குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை சுற்றியுள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.