குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதற்கிடையில் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாமல் டாக்டர்கள் திண்டாடி வருகின்றனர்.இதனை தொடர்ந்து,வியாழக்கிழமை சூரத் நகரில் 26 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,551 பேர் புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் உள்ள டயமண்ட் மருத்துவமனையில்,பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா வைரஸினால் பாதிக்கபட்டு இறந்துள்ளது.
இதுகுறித்து டயமண்ட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,”ஏப்ரல் 1 ஆம் தேதியன்று பிறந்த அப்பெண் குழந்தை பிறக்கும் போதே கொரோனா வைரஸ் தொற்றுடன்தான் பிறந்தது.ஏனெனில் அக்குழந்தையின் தாயும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.அதன் பின்னர், குழந்தையின் தாய் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும்,அப்பெண் குழந்தை வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டு,ரெமெடிசிவிர் என்ற கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது.இதனையடுத்து,சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை வியாழக்கிழமையன்று இறந்தது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…