#BREAKING: 14-ம் தேதி முதல் 11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்- தேர்வுத்துறை அறிவிப்பு.!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும்  என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்தில் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தலா600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தனித்தனியாக தரப்படும் எனவும், தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு பிளஸ் 1 பிளஸ் 2-வில் பெற்ற  மதிப்பெண் ஒரே பட்டியல் வழங்கப்படும்.

அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan