தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 1,330 பேர் டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 1,330 பேர் குணமடைந்துள்ளனர் ,13 பேர் பலியாகியுள்ளனர். 

பாதிப்பு நிலவரம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,236 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 7,92,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 333 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,18,198 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள்:

தமிழகத்தில், கொரோனாவால் இன்று 13 பேர் பலியாகியுள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,822 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள்:

கொரோனாவில் இருந்து இன்று 1,330 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 7,70,378 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாதிரிகள்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65,186 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,26,05,289 -ஐ கடந்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.