மகாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் என்கவுண்டர்..!

மகாராஷ்டிரா கட்சிரோலியில் உள்ள எட்டப்பள்ளி என்ற வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் 13 நக்சலைட்டுக்கள் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அதிகமாக நக்சலைட்டுகளின்  நடமாட்டம் இருப்பது மகாராஷ்டிரா போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலை மகாராஷ்டிரா போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே எட்டப்பள்ளியில் உள்ள பேடி கோட்டமி வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இதில் 13 நக்சலைட்டுகள் போலீசாரால் சூட்டு கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிராவில் உள்ள சி-60 பிரிவு காவல்துறையினருக்கும் நக்ஸலைட்டுக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 13 நக்சலைட்டுகளின் உடல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மகாராஷ்டிராவின் காவல்துறை துணை ஆய்வாளர் சந்தீப் படேல் இந்த சண்டை பெரும் வெற்றியை பெற்று தந்தது என்றும் இதில் அதிகளவில் நக்சலைட்டுகள் அழிந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.