கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி

கனடாவில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் உள்ள நோவா ஸ்காட்டியா நகரில் மர்மநபர் ஒருவர் போலீஸ் போல உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றியுள்ளார்.மேலும் அந்த நபர் பல வீடுகளில் துப்பாக்கி மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.இவர் நடத்திய தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒரு போலீசார் பலத்த காயமடைந்துள்ளார்.

இதன் பின்னர் தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடினார்கள்.ஆனால் அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்த நிலையில் அந்த நபரும் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு 51 வயது என்றும் அவர் கேப்ரியல் வார்ட்மேன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.