கடிதம் எழுதி வைத்து 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..!

தனது குடும்பத்தில் தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை. 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது குடும்பத்தில் தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவிக்கு கண்களில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக அறுவை சிகிச்சை செய்ததில் அவரது பெற்றோர்கள் அதிகம் பணத்தை செலவு செய்துள்ளனர். கூலி வேலை செய்யும் தனது பெற்றோருக்கு  சிரமப்படுவதாக எண்ணி மாணவி  மனமடைந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மாணவியின் இந்த செயல் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment