பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,186 ஆக உயர்வு..

கடந்த மூன்று தசாப்தங்களில் வரலாறு காணாத பருவமழையால், பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்கள் உட்பட நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளம் மூழ்கடித்தது.

“இதுவரை 1,186 பேர் இறந்துள்ளனர் மற்றும் 4,896 பேர் காயமடைந்துள்ளனர், 5,063 கிமீ சாலைகள் சேதமடைந்துள்ளன, 1,172,549 வீடுகள் பகுதி அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, 733,488 கால்நடைகள் பலியாகியுள்ளன” என்று பேரிடர்களை கையாளும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.

வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார் அகமது கூறுகையில், “பெரிய அளவிலான பேரழிவு” காரணமாக 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு வரை, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவில் இருந்து 21 விமானங்கள் மூலம் வெள்ள நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். மீட்புப் பணிகள் தொடங்கியதில் இருந்து சுமார் 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment