Categories: இந்தியா

11 வயது சிறுமியை 5 முதியவர்கள் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் தொடர்ந்து 9 மாதங்களாக பாலியல் கொடுமை!

5 முதியவர்கள் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் 11 வயது சிறுமியை  தொடர்ந்து 9 மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கோட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் தாயுக்கு மகளாக உள்ள 11 வயது சிறுமியை, மஞ்ஜி ஜாவியா (67), அரவிந்த் குபவத் (52), விஜயானந்த் மையத் (52), விபுல் சவ்டா (40), கோவிந்த் சக்காரியா (60) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை அடிக்கடி தனியாக அழைத்துக்கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவருடைய தாய். அப்போது அவர் 8 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்தனர். அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாய் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பிறந்த குழந்தைக்கு முதுகெலும்பு மற்றும் மூளையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த குழந்தை இரண்டு கால்களும் போதுமான வளர்ச்சி இல்லாமல் இருப்பதாகவும் கூறினர். இதனால் அந்த குழந்தை நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது எனவும் தெரிவித்தனர்.

11 வயது சிறுமிக்கு பிறந்த அந்த குழந்தை தங்களுக்கு வேண்டாம் என சிறுமியின் தாயும் அவருடைய பாட்டியும் தெரிவித்துள்ளனர். 11 வயது சிறுமியால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது எனவும், அந்த குழந்தை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு தனது பேத்தி இன்னும் முதிர்ச்சியடையவில்லை என சிறுமியின் பாட்டி மருத்துவர்களிடம் தெரிவித்தார். அதனால் குந்தையை ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தை நீண்ட நாட்கள் உயிரோடு இருக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 5 முதியவர்களும் பாலியல் வன்முறை வழக்கு மற்றும் குழந்தைகள் பாதுகப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அந்த 17 வயது சிறுவன், சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago