11 மணி நேர போராட்டத்திற்குப் பின் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை உயிருடன் மீட்பு!

11 மணி நேர போராட்டத்திற்குப் பின் ,குஜராத் மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை உயிருடன் மீட்கப்பட்டது. சோம்நாத் மாவட்டத்தில் இரை தேடி வந்த சிறுத்தை அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்தது. இதைக்கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 11 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிறுத்தை உயிருடன் பிடிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment