அடுத்தமாத இறுதிக்குள்..10-ஆம் வகுப்பு முடிவுகள்.. அமைச்சர் செங்கோட்டையன்.!

அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 10-வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று  வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டியளித்துள்ளார். மேலும், வருகின்ற 27-ம் தேதி 12-ஆம் வகுப்பு மறுதேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்தமாத முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டபிறகு 1முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan