BREAKING:10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு -முதலமைச்சர்.!

இன்று சட்டப்பேரவையில்  1 முதல் 9 வகுப்பு வரை உள்ள  அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கவும் ,மேலும் பொதுத்தேர்வை ஒத்திவைக்கவும் தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

இம்மாதம் 27-ம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13 -ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்தார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 14-ம் தேதிக்கு மேல் தொடங்கும் எனவும் வழக்கம் போல 11, 12-ம்  வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்தார்.

author avatar
murugan