நெல்லையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.!

தமிழ்நாட்டில் நேற்று 1604 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள். இன்று திருநெல்வேலியில் 107 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போது பரவி  வரும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பற்றியும், அதனை தடுக்க தமிழகஅரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், ‘ இன்று திருநெல்வேலியில் மொத்தமாக 107 காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 1604 முகாம்கள் நடைபெற்றன. அதே போல இன்றும் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

3 பேருக்கு மேல் ஒரு பகுதியில் காய்ச்சல் இருந்தால் அந்த பகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல் மட்டுமே.

தமிழகத்தில், எச்1என்1 வைரஸால் பாதிக்கப்பட்டோர்  442பேர். அவர்களில் 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் வீடுகளில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கின்றார்.

இந்த காய்ச்சல் வந்தால் 3 முதல் 5 நாட்கள் வீட்டில் இருந்தாலே போதுமானது. இருமல் , தும்மல் ஆகியவற்றால் பரவும் என்பதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஜனவரி முதல் நெ 6 பேருக்கு எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருந்துள்ளது.

நாங்குநேரி சாலையில் 10கோடி செலவில், பிரதான சாலையில் சாலை விபத்துக்கான சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு முதற்கட்டமாக இடம் பார்க்கப்பட்டுள்ளது’ என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகல் இருக்கிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழகத்தில் இருக்கிறது. முதலில் மத்திய அரசு கவுன்சிலிங் முடிந்ததும். மாநில அரசுக்கான கவுன்சலிங் ஆரம்பிக்கப்படும்.’ எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

6 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

11 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

11 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

11 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

11 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

12 hours ago