கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்ததால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது .கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 37 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர் .தற்போது வரை 102 பேர் உயிரிழந்துள்ளனர்.ராணுவம், விமானப்படை, கடற்படை என அனைத்து படைகளும் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது.