தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 1 வயது 7 மாத ஆன ஆண் குழந்தை 08.07.2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சை பெற்று வந்த நிலையில் 09.07.2020 அன்று மாலை 03.40 மணிக்கு கொரோனா மற்றும் பிற நோய்களால் உயிரிழந்தது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.