1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது

பஞ்சாபில் 1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம்  பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பஞ்சாபின் கலால் துறையினர் வெள்ளிக்கிழமை(செப் 2) லூதியானாவில் ஆற்றங்கரைக்கு வெளியே ஒரு இடத்தில் கள்ளச்சாராயம்  தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1.45 லட்சம் லிட்டர் லஹான் என்ற மூலப்பொருளை மீட்டு அழித்தனர்.

மாநில அமைச்சரான ஹர்பால் சிங் சீமா கூறுகையில், “மது மாஃபியாவின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

சட்டவிரோதமாக யாராவது கள்ள சாராயம் தயாரிக்கிறார்களா என தேடுதல் பணியில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

author avatar
Varathalakshmi

Leave a Comment