Categories: Uncategory

சித்திக்கு கத்தி குத்து 1½ மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொலை

ஸ்ரீவைகுண்டம், 

தந்தையின் 2-வது மனைவியை கத்தியால் குத்திய வாலிபர், அவர்களுக்கு பிறந்த 1½ மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

2-வது திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 50). இவர் கேரள மாநிலத்தில் வடை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வண்டி மலைச்சி. இவர்களுடைய மகன் வண்டி மலையான் (21). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லப்பாண்டிக்கும், வண்டி மலைச்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் செல்லப்பாண்டி, வல்லநாடு அருகே பாறைக் காடு கிராமத்தை சேர்ந்த ராஜேசுவரியை (38), 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தினி என்ற 1½ மாத பெண் குழந்தை இருந்தது. பின்னர் செல்லப்பாண்டி நாட்டார்குளத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு செல்லாமல், பாறைக்காட்டில் உள்ள ராஜேசுவரியின் வீட்டுக்கு சென்று வந்தார்.

குழந்தை அடித்துக்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் இருந்து செல்லப்பாண்டி பாறைக்காடு கிராமத்துக்கு வந்தார். அவர் தன்னுடைய 2-வது மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு நேற்று காலை கேரளா புறப்பட்டு சென்றார்.

தனது தந்தை 2-வது திருமணம் செய்தது வண்டி மலையானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று மதியம் வண்டி மலையான், ராஜேசுவரியின் வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 1½ மாத பச்சிளம் குழந்தை நந்தினியை தூக்கி தரையில் அடித்துக்கொலை செய்தார். இதைப்பார்த்த ராஜேசுவரி அலறி துடித்தார்.

தீவிர சிகிச்சை

இருப்பினும் ஆத்திரம் தீராத அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேசுவரியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே வண்டி மலையான் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேசுவரியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வண்டி மலையானை வலைவீசி தேடி வருகின்றனர். 

Castro Murugan
Tags: #Thoothukudi

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago