வேதாந்தா குழும இயக்குனர் அதிரடி!ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை!

வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிசோர் குமார் ,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலையின் உரிமத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்காததால் செயல்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா என வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிசோர்குமாரிடம் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தைப் பெறச் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment