விசாகப்பட்டினம் ரயில்நிலையத்தில் முழுவதும் பெண்களைக் கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு முக்கியத்துவம் என்ற அடிப்படையில் ரயில்வே துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சுபத்ரா வாஹினி ((Subhadra Vahini)) என்ற பெயரிலான பெண்கள் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 16 பெண்கள் உள்ளிட்ட 32 பேர் இடம்பெற்றுள்ளனர். ஆபத்து காலங்களில் இந்தப்படையினரை 182 என்ற டோல்ஃப்ரீ எண்ணிலோ இந்தப் படையின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.