ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படத்துக்காக மும்பை தாராவி செட் சென்னையில் அமைத்து எடுத்ததைப் போலவும், அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு செட் அமைத்து எடுப்பதைப் போலவும் தற்போது முன்னணி நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கும் செட் அமைத்து எடுப்பது அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது கே.எம்.சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் புதிய படத்தினையும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுத்து வருகின்றன.
சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களமான உருவாகி வரும் இப்படத்தின் கதை அடுத்து வர உள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் கதையைப் போல வித்தியாசப் பின்னணி என்பதால் மறுக்காமல் படப்பிடிப்புக்கு கிளம்பினார் நயன்தாரா.
சென்னை படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விரைவில் பொள்ளாச்சியில் நடக்க உள்ள அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தயாராகவும் திட்டமிட்டிருக்கிறார், நயன்.