மூன்று டி20 போட்டிகளையும் கைப்பற்றிய இந்தியா…

இந்தியா; மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி  விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்  மட்டுமே எடுத்தது,

பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில்  மணிஷ் பாண்டே 32 , ஷிரேயாஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்தனர். ஏற்கனவே தொடரை வென்றுள்ள நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்தியா  3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை மொத்தமாக வீட்டுக்கு அனுப்பியது …

sources;dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment