மும்பை – ஹவுரா விரைவு ரயில் தடம் புரண்டதால் அடுத்தடுத்து செல்லும் 12 ரயில்கள் ரத்து..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நாக்பூர் வழியாக ஹவுரா செல்லும் ரெயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டது. இன்று அதிகாலை இகாத்பூர் ரெயில் நிலையத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின.

இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் செல்ல இருந்த 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 1 ரெயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழித்தடத்தை சரிசெய்யும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும், விரைவில் ரெயில்பாதை சரி செய்யப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment