மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

கடந்த மாதம் 27ஆம் தேதி முதல்  வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாகக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை நின்று வெயில் அடிக்க தொடங்கிவிட்டது. ஆனாலும் ஒரு சில தென்மாவட்டங்களில் கொஞ்சம் மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக உருவெடுத்து உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து இந்த மாதம் 26-ந் தேதி தென் மேற்கு வங்க கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதனால் இந்த மாதம் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழக தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment