மனைவியை வைத்து சூதாடிய கணவன் ..!

ஒடிசா மாநிலத்தில் பன்ஷீர் – தலாய் ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலாயிடம் கையிலிருக்கும் பணத்தை இழந்த பன்ஷீர் இறுதியாக தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளான்.
ஆனால், அதிலிலும் தோற்றுப்போகவே சிறிதும் இரக்கமின்றி தனது மனைவியை குளத்திற்கு அழைத்து வந்து தலாயிடம் ஒப்படைத்துள்ளார். என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அந்த பெண்ணை தலாய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை, அந்த பெண்ணின் கணவர் அருகிலிருந்து வேடிக்கை பார்த்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறக்கூடாது என கொலை மிரட்டலும் அப்பெண்ணுக்கு விடப்பட்டுள்ளது.
கொலை மிரட்டலையும் தாண்டி அப்பெண் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார். தற்போது, இருவரும் தலைமறைவாக இருக்கவே போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment