மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ..!

தமிழகத்தில் ஏராளமான போராட்டக்களங்கள் உள்ளதாகவும், இளைஞர்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ள வேண்டாம் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டையில் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது என்றும் நீட் தேர்வு என்பது தமிழகத்தின் சமூகநீதிக்கான கேடு என்றும் கூறினார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நீட் தேர்வை கண்டித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் மதிமுக பிரமுகர் ஜக்பர் அலியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment