பெரியகுளம் கலவரத்தை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கி பேசிய தாவது:-

பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தால் தலித் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை அரசு நிவாரண தொகை வழங்காமல் உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விரைந்து நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment