திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை.! ஒருவரை கைது செய்த காவல்துறை.!

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.

கொள்ளையடித்து அந்த ஏடிஎம்-ஐ  எரித்து விட்டு, மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளிலும் சிக்காத வண்ணம் தப்பித்து விட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

இதில் ஹரியானா, கர்நாடகா மாநிலங்களுக்கு கொள்ளையர்களை தேடி காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர். மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இறுதியில் தொலைபேசி உரையாடல்களை கொண்டு அறைந்து ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் எனப்வரை பெங்களூருவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் விடுதியில் தங்கி கொள்ளைக்கு திட்டமிட்டது தெரியவந்துள்ளது. தற்போது விடுதி மேலாளரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், ஆரிப் உடன் சம்பந்தப்பட்ட அந்த கொள்ளை கும்பல் நபர்கள் குறித்த விசாரணையையும் காவல்துறைனர் மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment