புதுச்சேரியில் பயங்கரம் போதை மருந்து கொடுத்து தோட்டத்தில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்

புதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு  வேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமிக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமியை தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி,அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார்  தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்து போதை மருந்து கொடுத்து  7 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.அதன் பின்  தனது பெற்றோரிடம் தெரிவித்த அந்த சிறுமி நடந்ததை கூறி அழுதுள்ளார் இதுகுறித்து  குழந்தைகள் நலவாரியம் மூலம் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் அந்த சிறுமியை மீட்டு  புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை நடத்தினர் .

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர்  சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் விக்கி, முகிலன், சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்,இந்த 8 பேரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் 11 வயது சிறுமியை அந்த அப்பார்ட்மென்டில் வேலைசெய்த காவலர்கள்  17 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை 7 மாதமாக கொடுத்து வந்துள்ளனர் இதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இது அடங்குவதற்குள் புதுச்சேரியில் இப்படி ஒரு நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment