புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்-நடத்தகாலக்கெடு..! எதனையும்உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை-நாராயணசாமி..!

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துகளை முன்வைத்திருப்பதாகவும், வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த  உத்தரவிட்டிருப்பினும், அதற்கான காலக்கெடு எதையும் விதிக்கவில்லை என்றும் நாராயணசாமி அப்போது தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment