பிரபல தொகுப்பாளர் கோபிநாத்திற்காக சூர்யா செய்யும் செயல் என்ன தெரியுமா…!??

 
 
தற்போதுள்ள டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களுள் மிக பிரபலமானவர் ‘நீயா நானா’ கோபிநாத். இவர் நடத்தும் நிகழ்ச்சியும் சரி, பேட்டிகளும் சரி கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார். அண்மையில் தான் எழுதிய ஒரு புத்தகத்திற்கு பெயர் என்ன வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கேட்டு டுவிட்டரில் ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தினார். அதில் ரசிகர்கள் அதிகமானோர் தேர்வு செய்த பெயரை நடிகர் சூர்யா அவர்கள் வரும் 8ம் தேதி வெளியிட இருக்கிறாராம். இந்த தகவலை கோபிநாத் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அவருடைய பதிவு
https://twitter.com/Gobinath_C/status/949322937181487106

author avatar
Dinasuvadu desk

Leave a Comment