குடகு பகுதியில் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் ஸ்மிரிதி இரானி பேசுகையில், ராகுல்காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது. அவர் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது. சின்ன பையனான அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது.
கர்நாடகத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. மத்திய அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம், மாநில அரசின் திட்டங்கள் என காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறார்கள். ராகுல்காந்தி போட்டியிட்ட அமோதி தொகுதியில் வளர்ச்சி பணிகளை மோடி செய்துள்ளார். மோடியின் கரங்களை பலப்படுத்த மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டு போட வேண்டும். காங்கிரஸ் கட்சியால் நாடு பின்னோக்கி சென்றது. தற்போது மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுன் இணைந்திருங்கள்…