இன்று இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு தொடங்கியது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
இஸ்லாமிய மாதங்களில் ரமலான் மாதத்தில்தான் புனித நூலான குர் ஆனின் வசனங்கள் இறைவன் மூலம் கிடைக்கப்பெற்றதாக நம்பப்படுகிறது. எனவே அந்த மாதத்தை நோன்பு மாதமாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், செல்வந்தர்களும் பசியின் தீவிரத்தையும், உணவு கிடைக்காதவர்களின் நிலையையும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிக்கின்றனர்.
நாள் முழுவதும் நோன்பிருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் கஞ்சி மற்றும் பழச்சாறு அருந்தி நோன்பை முடித்துக் கொள்வது வழக்கம். இந்த நோன்புக் காலத்தின் போது, ஸக்காத் எனப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கிடவேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ரமலான் நோன்பிற்கான பிறை நேற்றிரவு தென்பட்டதால், இன்றுமுதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்றிரவு முதல் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகையும் நடத்தப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…