நில அளவையர் வீட்டில் திருடப்பட்ட தங்க, வைர நகைகள், ரூ.40,000 பறிமுதல்…!!

வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய சிவகங்கையை சேர்ந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வுபெற்ற நில அளவையர் வீட்டின் பூட்டை உடைத்து, 16 சவரன் நகை மற்றும் 83 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையனை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இதனிடையே சந்தேகத்தின் பேரில் சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்தில்குமாரை கைதுசெய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 26 சவரன் நகை, வைர மோதிரம் மற்றும் 40 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

dinasuvadu.com

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment