தொடரும் இரவு நேர கைது.! தனியாத பதற்றம்..!மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்…!

இரவு நேர கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது; இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பந்தமாக போலீசார் வீட்டின் கதவை உடைத்து மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ம் தேதி ஸ்டெர்லைட் க்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர் இதன் தொடர்ச்சியாக போலீசார் பொதுமக்களை மிரட்டும் விதமாக ஒவ்வொருவர் வீட்டிற்க்கு இரவு நேரங்களில் சென்று வீட்டின் கதவை உடைத்து மிரட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி சிப்கார்ட்,புதுக்கோட்டை,தென்பாகம் ,வடபாகம் ,மத்தியபாகம் ஆகிய காவல் நிலையங்களில்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுவரை 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அண்ணாநகர் பகுதிக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து 23  பேரை கைதுசெய்துள்ளனர் .இதனால் அச்சம் அடைந்த மக்கள் அங்குள்ள கோவில் திடலில் ஒன்றுதிரண்டு காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மாநகர செயலாளர் தா.ராஜா தெரிவிக்கையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட கிராமங்களில்  இரவு நேரங்களில் வீடுகளுக்குள் ஏறிகுதித்து இளைஞர்களையும் பெண்களையும் அச்சிறுத்தும் வகையயில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிரார்கள் இது மிகவும் கண்டிக்கத்தக்கது முறையான அனுமதி பெற்று பகல் நேரங்கில் குற்றவாளி இவர்தான் என அடையாளம் கண்டு கைது செய்யட்டும்   என்று கூறினார் .

Dinasuvadu desk

Recent Posts

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

6 mins ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

10 mins ago

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

20 mins ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

39 mins ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago