தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக 60 க்கும் மேற்பட்டோர் அறிவிப்பு!விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் புறக்கணிப்பதாக அறிவிப்பு!

தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி 65-வது தேசிய திரைப்பட விருதுகள்  டெல்லியில் அறிவிக்கப்பட்டது.

இதில்   சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக 60 க்கும் மேற்பட்டோர் அறிவித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிலருக்கு மட்டுமே விருது வழங்குவார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment