தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் – திருநாவுக்கரசர் பேச்சு!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார்.

தமிழகத்தில் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். காமராஜர் பிறந்த நாளுக்குள் மேலும் 20 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பா.ஜ.க. அரசைக் கண்டித்து, புதுடெல்லியில் வருகிற 29-ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. சட்டமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். வருகிற நவம்பர் 18-ந்தேதிக்கு முன்னதாகவும் வரலாம். மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ் போன்ற பல்வேறு தலைவர்களும் பா.ஜ.க. அரசை எதிர்க்கின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக நிச்சயம் வருவார்.

தமிழகத்தில் எத்தனையோ பேர் முதல்- அமைச்சராக முயற்சி செய்து வருகின்றனர். சினிமாவில் நடித்தால் முதல்- அமைச்சராகி விடலாம் என்று கருதுகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அது விரைவில் மூன்றாகவும் உடையலாம். தி.மு.க.வுக்கு பிறகு 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழும். இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். மன ஒற்றுமையுடன் ஆட்சி செய்யவில்லை. பிரதமரின் வற்புறுத்தலினால் ஒன்றாக இருப்பது போன்று பாவனை செய்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை அதிகாரப்பூர்வமாக நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிடும் வரையிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் தி.மு.க. கூட்டணி மனித சங்கிலியில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

கூட்டத்தில் நகர தலைவர் ராஜாமணி, காயல்பட்டினம் நகர பொறுப்பாளர் ஏ.எஸ்.ஜமால், மாவட்ட மகளிர் அணி தலைவி அன்புராணி, மீனவர் அணி செயலாளர் அந்தோணி சுரேஷ், இளைஞர் அணி தலைவர் ஜெயசீலன் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Dinasuvadu desk

Recent Posts

கிரிக்கெட்ல இத்தனை வகை டக்-அவுட் இருக்கா ? தெரிஞ்சுக்கோங்க !!

Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…

20 seconds ago

7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…

14 mins ago

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

46 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

50 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

1 hour ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

2 hours ago