தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு!

தமிழக அரசு தென்மண்டல ஐஜி ஷைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் 9 பேரை பணியிடமாற்றம் செய்தும் 2 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும்  உத்தரவிட்டுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் இருந்த மனோகரனுக்கு திருப்பூர் நகர காவல் ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர ஆணையராக இருந்த நாகராஜன், சென்னை பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டிஐஜி பாஸ்கரனுக்கு காவல்துறை செயலாக்கப்பிரிவு ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுரை தென்மண்டல ஐஜியாக இருந்த ஷைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சண்முக ராஜேஷ்வரன் மதுரை தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரைமாநகர காவல் ஆணையராக டேவிட்சன் வோசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக மகேந்தர் குமார் ரத்தோட் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐஜி பாஸ்கரன், தமிழக காவலர் பயிற்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment