தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைவு: சுகாதாரத்துறை அமைச்சகம்

 

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 – 2015ல் ஆண்டில் 4407 பேரும், 2015-2016ல் 4437 பேரும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4536 பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல் 2375 பேர் இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவு என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment