தனிக்குடுத்தனம் வேண்டும் என்று விஷம் குடித்த மாமியார் , மருமகள்..!!

சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார் பலியானார். மருமகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி.   கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக சரஸ்வதிக்கும் அவரது மாமியார்  சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் மாமியார் சாந்தி உயிரிழந்தார்.மருமகள் சரஸ்வதி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment