சென்னையில் குறைந்த விலையில் புதிய கார் வாங்கி தருவதாக மோசடி!

குறைந்த விலையில் புதிய கார் வாங்கி தருவதாக கூறி ,சென்னை வளசரவாக்கத்தில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். வேலன் நகரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜேஷ் கண்ணா என்பவர், புதிதாக கார் ஒன்றை வாங்க விரும்பி ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்த ராயப்பேட்டையை சேர்ந்த சையத் கபீரை தொடர்பு கொண்டார்.

அப்போது சுங்கத்துறையில் இருந்து 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை 11 லட்சத்திற்கு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய சையத் கபீர், வரிக்காக 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி ராஜேஷ் கண்ணா பணம் கொடுத்ததும் அதை வாங்கிய கபீர் காரும் தராமல், பணமும் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

ராஜேஷ் கண்ணா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், சையத் கபீரை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் இதேபோல் பல இடங்களில் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment