சீறும் பார்த்திபன்..! கோபத்தின் விளிம்பில் மக்கள்..!

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்  தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.
இயக்கி நடித்த திரைப்படங்கள்

  • புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
  • உள்ளே வெளியே
  • ஹவுஸ்ஃபுல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
  • இவன்
  • குடைக்குள் மழை
  • வித்தகன்’

இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

பார்த்திபன் அறுத்தெறியுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,

இந்த நிமிடம் 
இதே மணிக்கு 
இங்கோ அங்கோ எங்கோ 
ஒரு பாலியல் வன் கொடுமை 
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது… 
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய 
நிகழ்வை பார்த்தபடி!!! 
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த
ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர்,
ஈக்களாய் மொய்த்துக்
கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே நம் கண்களையும், காதுகளையும்
கூர்மையாக்கி, ____-க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment