சீனாவில் வண்ண மலர்களால் 300 சதுர கிலோ மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம்!

300 சதுர கிலோ மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மலர்களால் ஆன தோட்டத்தைப் பார்வையிட சீனாவில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஸிஜியாங் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க சிறிய சொகுசு ரயில் வசதியும் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜிஹூவா மாலைப்பிரதேசத்தில் ((Jiuhua Mountain)), ஹூவான்கோஷூ ((Huangguoshu Waterfall)) அருவி பகுதிகளில் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் இந்தத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment