சீக்கியர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யும் பாகிஸ்தான் அரசு…!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோஹைல் மஹமூத்தைச் சந்தித்த, ஷிரோமணி அகாலி தல் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மனுவை அவர்களிடம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுக்பிர் சிங் பாதல், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா நகரில் வாழும் சீக்கியர்கள் கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த விசியத்தில்  தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதாகவும்…

அப்போது, மத மாற்றத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் சோஹைல் மஹமூத் தெரிவித்ததாக சுக்பிர் சிங் பாதல் கூறினார்…

sources; dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment