சபரிமலையில் பாதுகாப்பு, வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழு இன்று தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
கேரளாவின் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் கடந்த மாதத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை என்றும் தெரிவித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ் சிரி ஜகன், பி.ஆர்.ராமன் மற்றும் டி.ஜி.பி ஹேமசந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தக் குழு சபரிமலையில் இன்று பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
dinasuvadu.com
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…