கோயில் திருவிழாவினை ஒட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஜல்லிக்கட்டு..!! போட்டி களைக்கட்டியது..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே, கோயில் திருவிழாவினை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பில் தொடங்கியுள்ள ஜல்லிக்கட்டில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 350 காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 200 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர்.

வாடிவாசல் வழியே சீறிப்பாயும் காளைகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பீரோ, கட்டில், தங்கக் காசுகள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment