கொலிஜீயம்,உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு செய்யும் விவகாரத்தை ஒத்திவைத்துள்ளது.
ஜோசப் நியமனத்தை அங்கீகரிக்க மத்திய அரசு, மறுத்துள்ளது குறித்து விவாதிக்க டெல்லியில் புதன்கிழமை அன்று கொலிஜீயம் கூட்டம் நடைபெற்றது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுப்பது என்றும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கே.எம். ஜோசப் விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.