சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் தப்பாட்டையை அடித்துக்கொண்டு இயற்கை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி மற்றும் 5 பேர் கேரளாவுக்கு நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்) காவலர் ஸ்டாலின், அங்கு வந்தார். அவர், தன்னுடைய செல்போனில் அவர்களை போட்டோ பிடித்துள்ளார். இதற்கு வளர்மதியுடன் வந்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு காவலர் ஸ்டாலின் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து, வளர்மதி மற்றும் அவருடன் இருந்த 5 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி, 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.அவர்களை அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து வளர்மதி உள்ளிட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.வளர்மதி பெண்கள் சிறையில் இந்த கைது நடவடிக்கைக்கு காரணமான காவலர் ஸ்டாலின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தை சிறையில் தொடங்கினார்.நேற்றே சிறை அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.ஆனாலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
DINASUVADU
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…