காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொதுமக்களில் இருவர் காயம் அடைந்தனர்.

அனந்த்நாக் மாவட்டம் ஸ்ரீகுஃப்வாரா ((Srigufwara)) பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை முதல் அங்கு தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவரும் உயிரிழந்தார். மேலும் பொதுமக்களில் இருவர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஜே.கே. எனப்படும் ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment